ADDED : ஜூலை 01, 2024 03:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கரூர் அருகே மகனை காணவில்லை என, தந்தை போலீசில் புகாரளித்துள்ளார். கரூர் மாவட்டம், நரிகட்டியூர் தமிழ் நகர் பகுதியை சேர்ந்த பழனிசாமி மகன் ஆறுமுகம், 27; டிரைவர். திருமணம் ஆகாதவர். இவர், நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்து, வெளியே சென்றுள்ளார். ஆனால், வீடு திரும்பவில்லை. உறவினர்கள், நண்பர்களின் வீடுகளுக்கும் ஆறுமுகம் செல்லவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த ஆறுமுகத்தின் தந்தை பழனிசாமி, 65, போலீசில் புகாரளித்துள்ளார்.
பசுபதிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.