/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
போதை பழக்கத்திற்கு எதிராக மாணவர்கள் உறுதிமொழி
/
போதை பழக்கத்திற்கு எதிராக மாணவர்கள் உறுதிமொழி
ADDED : ஆக 15, 2024 01:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரவக்குறிச்சி,
க.பரமத்தி ஒன்றியத்துக்கு உட்பட்ட, தொட்டியபட்டி தொடக்கப் பள்ளியில் போதை பழக்கத்திற்கு எதிராக மாணவர்கள் உறுதிமொழி ஏற்றனர்.
க.பரமத்தி ஒன்றியத்துக்கு உட்பட்ட, தொட்டியப்பட்டி தொடக்கப் பள்ளியில், 95 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று, மாணவர்கள் போதை பழக்கத்திற்கு எதிராக உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர் அப்போது தலைமை ஆசிரியர் மூர்த்தி, போதை பொருள்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கினார். பின்னர், மாணவர்களை போதைபொருள்கள் பயன்படுத்துவதற்கு எதிராக உறுதி மொழியை ஏற்க செய்தார்.