/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தப்பாட்ட கலைஞர் தண்ணீரில் மூழ்கி பலி
/
தப்பாட்ட கலைஞர் தண்ணீரில் மூழ்கி பலி
ADDED : ஆக 15, 2024 07:27 AM
குளித்தலை: குளித்தலை அடுத்த, இரணியமங்கலம் பஞ்., வலையப்பட்டி கிராமத்தை சேர்ந்த பால்ராஜ் மகன் சண்முகசுந்தரம், 20. இவர் டிப்ளமோ படித்துள்ளார். மேலும் தப்பாட்ட கலைஞராக இருந்து வந்தார்.
நேற்று காலை 8:30 மணியளவில், வலையப்பட்டி கட்டளை மேட்டு வாய்க்காலில் குளிக்கும் போது, அதி-களவு தண்ணீர் வந்ததால் மூழ்கி உயிருக்கு போராடினார். அருகில் இருந்தவர்கள் வாலிபரை போராடி மீட்-டனர். பின்னர் அவரை குளித்தலை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பணியில் இருந்த மருத்து-வர்கள் சோதனை செய்த போது, ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
தகவல் அறிந்த குளித்தலை போலீசார் சடலத்தை கைப்பற்றி, உடல் கூறாய்வுக்காக குளித்தலை அரசு மருத்-துவமனையில் அனுமதித்தனர்.
குளித்தலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.