/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பெண்ணுக்கு மிரட்டல் விடுத்தவர் கைது
/
பெண்ணுக்கு மிரட்டல் விடுத்தவர் கைது
ADDED : மே 12, 2024 12:23 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கரூர் அருகே, பெண்ணிடம் அரிவாளை காட்டி மிரட்டியவரை, போலீசார் கைது செய்தனர்.
கரூர் - சேலம் பழைய சாலை, வெண்ணைமலை பஸ் ஸ்டாப் பகுதியை சேர்ந்த காமராஜ் மனைவி சரிதா, 39. இவர் கடந்த, 9 இரவு, வீட்டுக்கு முன்னால் நின்று கொண்டிருந்தார். அப்போது, கரூர் வாங்கப்பாளையம் பகுதியை சேர்ந்த முத்தரசு, 44, என்பவர், முன்விரோதம் காரணமாக சரிதாவிடம் அரிவாளை காட்டி, தகாதவார்த்தையில் மிரட்டியுள்ளார். இதுகுறித்து, சரிதா கொடுத்த புகார்படி, வெங்கமேடு போலீசார், முத்தரசுவை கைது செய்து விசாரிக்கின்றனர்.