/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பள்ளி சிறுமி மாயம் போலீசில் தாய் புகார்
/
பள்ளி சிறுமி மாயம் போலீசில் தாய் புகார்
ADDED : ஜூன் 15, 2024 07:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை : குளித்தலை அடுத்த, சேங்கல் பஞ்., சுக்காம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் செல்வராணி, 42, கூலி தொழிலாளி, இவரது, 16 வயது மகள் பிரியங்கா அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்- 1 படித்து வருகிறார்.
கடந்த, 12ல் இரவு குடும்பத்தாருடன் துாங்கிக் கொண்டிருந்தார். அதிகாலையில் பார்த்தபோது காணவில்லை.
பல இடங்களில் தேடியும், விசாரித்தும் எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. தனது மகளை காணவில்லை என, தாய் கொடுத்த புகார்படி, மாயனுார் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.