/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தலை காயம் சிகிச்சைக்கு டாக்டர்கள் இல்லை திருச்சிக்கு நோயாளிகளை அனுப்பும் அவலம்
/
தலை காயம் சிகிச்சைக்கு டாக்டர்கள் இல்லை திருச்சிக்கு நோயாளிகளை அனுப்பும் அவலம்
தலை காயம் சிகிச்சைக்கு டாக்டர்கள் இல்லை திருச்சிக்கு நோயாளிகளை அனுப்பும் அவலம்
தலை காயம் சிகிச்சைக்கு டாக்டர்கள் இல்லை திருச்சிக்கு நோயாளிகளை அனுப்பும் அவலம்
ADDED : மே 30, 2024 01:37 AM
கரூர், கரூர், அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் தலை காயம் சிகிச்சைக்கு, டாக்டர்கள் இல்லாததால் நோயாளிகள் திருச்சிக்கு செல்லும் அவலம் தொடர்கிறது.
கரூர், அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், அவசர சிகிச்சை பிரிவு, குழந்தைகள் பிரிவு, எலும்பு முறிவு பிரிவு, தோல், இருதயம் உள்பட பல்வேறு பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. 880 படுக்கை வசதி கொண்ட மருத்துவமனைக்கு தினமும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து செல்கின்றனர். இங்கு தலை காயத்துக்கு, சிகிச்சையளிக்க டாக்டர்கள் இல்லாததால் நோயாளிகள தவித்து வருகின்றனர்.
இதுகுறித்து மருத்துவ பணியாளர்கள் கூறியதாவது:
சாலை விபத்து, அடிதடிகளில் காயம் அடைவோர் விபத்து சிகிச்சை பிரிவு, அவசர சிகிச்சைக்காக கொண்டு வரப்படுகின்றனர். ஒரு நாளைக்கு சராசரியாக, 20 முதல், 30 பேர் வரை விபத்து காய சிகிச்சைக்கு வருகின்றனர். பெரும்பாலானோர் உயிருக்கு போராடும் நிலையிலேயே வருகின்றனர். இங்கு, தலை காயத்துக்கு சிகிச்சையளிக்க டாக்டர் நியமனம் செய்யப்படவில்லை. தலையில் அடிபடுவோருக்கு முதலுதவி சிகிச்சை மட்டுமே இங்கு அளிக்கப்படுகிறது. மேல் சிகிச்சைக்காக, திருச்சி அரசு மருத்துவ கல்லுாரி மருந்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
கரூரில் இருந்து திருச்சிக்கு ஆம்புலன்ஸ் செல்ல, 2 மணி நேரமாகும். உடனடியாக சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளை, உரிய நேரத்தில் திருச்சி செல்ல முடியாமல் வழியில் உயிரிழப்பு ஏற்படுகிறது. டாக்டர்கள் காலிப்பணியிடம் நிரப்பப்படாததால், பெரும்பாலான நோயாளிகள் பிற மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகளுக்கு அனுப்புவதும், உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல் இறப்பதும் வாடிக்கையாகிவிட்டது. இங்கு தேவையான நிபுணர்களை நியமிக்க, சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கூறினர்.
இது குறித்து, கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை டீன் (பொ) ராஜா கூறுகையில்,'' தலை காயத்துக்கு சிகிச்சையளிக்கும் நரம்பியல் டாக்டர்,- நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் (எம்.டி) ஆகிய பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. டாக்டர்கள் நியமனத்தை தமிழக அரசு தான் முடிவு செய்ய வேண்டும். இதனால் தலையில் அடிபட்டு சிகிச்சைக்கு வரும் நோயாளிகளை, திருச்சி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு பரிந்துரை செய்ய வேண்டி உள்ளது,'' என்றார்.