/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
யு டியூபர் சவுக்கு சங்கருக்கு போலீஸ் காவல் நிறைவு
/
யு டியூபர் சவுக்கு சங்கருக்கு போலீஸ் காவல் நிறைவு
ADDED : ஜூலை 12, 2024 10:03 PM
கரூர்:யு டியூபர் சவுக்கு சங்கருக்கு, இன்றுடன் போலீஸ் காவல் நிறைவு பெறுகிறது.
கரூரைச் சேர்ந்த பிரியாணி கடை அதிபர் கிருஷ்ணனிடம், பண மோசடி செய்ததாக, கைது செய்யப்பட்ட விக்னேஷ் கொடுத்த வாக்குமூலம் அடிப்படையில், கரூர் டவுன் போலீசார், யு டியூபர் சவுக்கு சங்கரை கடந்த, 8ல் கைது செய்து, மறுநாள் கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நான்கு நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கிடைத்ததால், கரூர் டவுன் போலீசார் அழைத்து சென்றனர்.
வாங்கல் போலீஸ் ஸ்டேஷனில், சவுக்கு சங்கரிடம் கரூர் டவுன் போலீசார் விசாரித்தனர். அப்போது, கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த, அ.தி.மு.க., நிர்வாகிகளிடம் உள்ள தொடர்பு, விக்னேஷிடம் பணம் பெற்றது குறித்த தகவல்களை போலீசார் விசாரித்துள்ளனர்.
இன்றுடன், அவருக்கு, நான்கு நாள் போலீஸ் காவல் நிறைவு பெறுகிறது. இதனால் அவரை இன்று, கரூர் நீதிமன்றத்தில் டவுன் போலீசார் ஆஜர்படுத்த உள்ளனர். அவரின் போலீஸ் காவல் நீட்டிக்கப்படுமா அல்லது நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டு, சென்னை புழல் சிறைக்கு அவர் மீண்டும் அழைத்துச் செல்லப்படுவாரா என்பது இன்று தெரிய வரும்.