sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

ஈரோடு சாலையில் குடிநீர் குழாய் உடைப்பு

/

ஈரோடு சாலையில் குடிநீர் குழாய் உடைப்பு

ஈரோடு சாலையில் குடிநீர் குழாய் உடைப்பு

ஈரோடு சாலையில் குடிநீர் குழாய் உடைப்பு


ADDED : ஆக 14, 2024 02:24 AM

Google News

ADDED : ஆக 14, 2024 02:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்;கரூர் மாவட்டத்தில் உள்ள, கிராம பஞ்சாயத்துகளுக்கு காவிரி, அமராவதி ஆறுகளில் இருந்து, குடிநீரேற்று நிலையங்கள் மூலம், மேல்நிலை குடிநீர் தொட்டிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. பின், குழாய் மூலம் பொது குழாய் மற்றும் வீடுகள், வர்த்தக நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட இணைப்புகளுக்கு தண்ணீர் சப்ளை செய்யப்

படுகிறது.

ஆனால், கடந்த சில நாட்களாக, கரூர் - ஈரோடு சாலை புன்னம் சத்திரம் பஸ் ஸ்டாப் அருகே, குழாய் உடைந்து, தண்ணீர் வீணாக சாலையில் பாய்ந்து வருகிறது. இதனால், குறிப்பிட்ட கிராம பஞ்., பகுதிகளில் குடிநீர் சப்ளை செய்யப்படும் நாட்களில் மட்டும், தண்ணீர் சாலையில் செல்வதால், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் குழாய் உடைப்பை கண்டுகொள்வது இல்லை.

இதனால், அந்த பகுதியை சேர்ந்த பொது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். எனவே, க.பரமத்தி பஞ்., யூனியன் புன்னம் சத்திரம் பஸ் ஸ்டாப் அருகே, உடைந்த குடிநீர் குழாயை, உடனடியாக சரி செய்ய குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மற்றும் புன்னம் பஞ்., அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது

அவசியம்.






      Dinamalar
      Follow us