sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

குடிநீர் கேட்டு பெண்கள் காலி குடங்களுடன் மறியல் போராட்டம்

/

குடிநீர் கேட்டு பெண்கள் காலி குடங்களுடன் மறியல் போராட்டம்

குடிநீர் கேட்டு பெண்கள் காலி குடங்களுடன் மறியல் போராட்டம்

குடிநீர் கேட்டு பெண்கள் காலி குடங்களுடன் மறியல் போராட்டம்


ADDED : செப் 03, 2024 03:31 AM

Google News

ADDED : செப் 03, 2024 03:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: குளித்தலை அடுத்த, மருதுார் டவுன் பஞ்., பணிக்கம்பட்டி சந்தை நான்கு வழிச்சாலையில், இரணியமங்கலம் பஞ்., அரசு ஆரம்ப சுகாதார மையம் காலனி குடியிருப்பு பகுதியில் கடந்த, 20 நாட்களாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து பஞ்., மற்றும் யூனியன் நிர்வாகத்திடம் மக்கள் கோரிக்கை மனுக்கள் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்க-வில்லை. இதையடுத்து, குடிநீர் வழங்காததை கண்டித்து அப்ப-குதி மக்கள் காலி குடங்களுடன், பணிக்கம்பட்டி சந்தை நான்கு வழிச்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். குளித்தலை இன்ஸ்பெக்டர் உதயகுமார், எஸ்.ஐ., பிரபாகரன் ஆகியோர், மறி-யலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தற்போ-தைக்கு, மக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு இன்றி மறியலை கைவிடுங்கள். உங்கள் பிரச்னை சம்பந்தமாக பஞ்., நிர்வாகம், யூனியன் நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும் என்றனர். பின் அங்கு வந்த, குளித்தலை யூனியன் கமிஷனர் விஜயகுமார் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில், இன்று மேல்நிலை நீர் தேக்க தொட்டி துாய்மை செய்யப்பட்டு, தட்டுப்பாடு இன்றி குடிநீர் வழங்கப்படும் என்று கூறியதையடுத்து, பொது மக்கள் கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us