/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
முத்திரையிடாத 122 எடைக்கருவிகள் தொழிலாளர் துறை அதிகாரிகள் பறிமுதல்
/
முத்திரையிடாத 122 எடைக்கருவிகள் தொழிலாளர் துறை அதிகாரிகள் பறிமுதல்
முத்திரையிடாத 122 எடைக்கருவிகள் தொழிலாளர் துறை அதிகாரிகள் பறிமுதல்
முத்திரையிடாத 122 எடைக்கருவிகள் தொழிலாளர் துறை அதிகாரிகள் பறிமுதல்
ADDED : பிப் 17, 2025 03:11 AM
குளித்தலை: குளித்தலை அடுத்த தோகைமலையில் வாரந்தோறும் வெள்-ளிக்கிழமை வாரச்சந்தை கூடுகிறது. இந்த சந்தையில், 150க்கும் அதிகமான வியாபாரிகள் காய்கறி, மளிகை பொருட்கள் உள்பட பல்வேறு பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர்.
இதில், பெரும்பாலான வியாபாரிகள் பொதுமக்களுக்கு வழங்-கப்படும் பொருட்களை, எடைக்கருவிகள் மூலம் எடையளவு செய்து விற்கின்றனர். இந்த எடைக்கருவிகளை, தொழிலாளர் துறையின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் முத்திரை செய்யப்பட்டு சரி-யாக வைத்திருக்க வேண்டும்.
இந்நிலையில் வாரச்சந்தையில் விற்பனை செய்யும் ஒரு சில வியாபாரிகள், முத்திரையிடாத எடைக்கருவிகளை கொண்டு விற்-பனை செய்து வருவதாக, மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் சென்-றது.இதையடுத்து, மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவுப்படி, தொழி-லாளர் துறை அதிகாரிகள் தோகைமலை, போலீசாரின் பாதுகாப்-புடன், தோகைமலை வாரச்சந்தையில் வியாபாரிகள் பயன்ப-டுத்தும் எடை கருவிகளை ஆய்வு செய்தனர். அப்போது, அனு-மதி இல்லாத, 122 எடைக்கருவிகளை பறிமுதல் செய்தனர்.