sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

நீட் தேர்வில் மாநில அளவில் 14வது இடம்; தோகைமலை அரசு பள்ளி மாணவி சாதனை

/

நீட் தேர்வில் மாநில அளவில் 14வது இடம்; தோகைமலை அரசு பள்ளி மாணவி சாதனை

நீட் தேர்வில் மாநில அளவில் 14வது இடம்; தோகைமலை அரசு பள்ளி மாணவி சாதனை

நீட் தேர்வில் மாநில அளவில் 14வது இடம்; தோகைமலை அரசு பள்ளி மாணவி சாதனை


ADDED : ஆக 28, 2024 07:42 AM

Google News

ADDED : ஆக 28, 2024 07:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: குளித்தலை அருகே, நீட் தேர்வில் மாநில அளவில் அரசு பள்ளி மாணவி, 14வது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

கரூர் மாவட்டம், குளித்தலை அடுத்த, தோகைமலை பஞ்., நாடக்காப்பட்டி கிராமத்தை சேர்ந்த கருப்பசாமி மகள் புனிதலட்சுமி, 17. இவர், தோகைமலை அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த 2022-23ம் கல்வியாண்டில் பிளஸ் 2 படித்தார்.

இந்த மாணவி நீட்தேர்வில் அரசு பள்ளியின், 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் மாநில அளவில், 14 வது இடமும், கரூர் மாவட்ட அளவில் முதலிடமும், நீட்தேர்வில், 627 மதிப்பெண்களும் பெற்று சாதனை படைத்தார்.

சென்னை ஸ்டான்லி மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், புனித லட்சுமிக்கு மருத்துவ படிப்பிற்கான இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தோகைமலை அரசு மேல்நிலைப் பள்ளிக்கும், நாடக்காபட்டி கிராமத்திற்கும் மாணவி பெருமை சேர்த்துள்ளார். மாணவியை பள்ளி ஆசிரியர்கள், சமூக ஆர்வலர்கள், மக்கள் பிரதிநிதிகள், சக மாணவ, மாணவிகள் பாராட்டினர்.






      Dinamalar
      Follow us