ADDED : நவ 22, 2024 01:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
20 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்
கரூர், நவ. 22-
கரூரில், 20 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்யப்பட்டு ஒருவர் கைதானார். மற்றொருவரை தேடி வருகின்றனர்.
கரூர், சின்ன ஆண்டாங்கோவிலை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன், 40. இவர், கன்னியாகுமரியை சேர்ந்த முருகன், 40, என்பரிடம் புகையிலை பொருட்களை வாங்கி விற்பனை செய்து வந்துள்ளார். நேற்று முன்தினம், சின்ன ஆண்டாங்கோவில் அருகில அண்ணாநகர் பகுதியில் விற்பனை செய்வதாக கரூர் டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி சோதனை செய்த போது, பாலசுப்பிரமணியனிடம், 120 கிலோ குட்கா பொருட்கள் இருப்பது தெரியவந்தது. அவரை கைது செய்து, குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். தலைமறைவாக உள்ள முருகனை தேடி வருகின்றனர்.