sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

நாமக்கல் லோக்சபா தொகுதியில் சோதனை ஒரே நாளில் ரூ.21.33 லட்சம் பறிமுதல்

/

நாமக்கல் லோக்சபா தொகுதியில் சோதனை ஒரே நாளில் ரூ.21.33 லட்சம் பறிமுதல்

நாமக்கல் லோக்சபா தொகுதியில் சோதனை ஒரே நாளில் ரூ.21.33 லட்சம் பறிமுதல்

நாமக்கல் லோக்சபா தொகுதியில் சோதனை ஒரே நாளில் ரூ.21.33 லட்சம் பறிமுதல்


ADDED : மார் 22, 2024 07:04 AM

Google News

ADDED : மார் 22, 2024 07:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல் : நாமக்கல் லோக்சபா தொகுதியில், சங்ககிரி, ராசிபுரம் (எஸ்.சி.,), சேந்தமங்கலம் (எஸ்.டி.,), நாமக்கல், ப.வேலுார், திருச்செங்கோடு என, ஆறு சட்டசபை தொகுதிகள் உள்ளன. லோக்சபா தேர்தலை முன்னிட்டு பறக்கும் படை குழுக்கள், 18, நிலையான கண்காணிப்பு குழுக்கள், 18, வீடியோ பார்வை குழுக்கள், 6 என, மொத்தம், 42 குழுக்கள் அமைக்கப்பட்டு, தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதில் பறக்கும்படை, நிலையான கண்காணிப்பு குழுவினர் நடத்தும் சோதனையில், 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் ஆவணம் இன்றி எடுத்த செல்லும் ரொக்கம், 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் எடுத்து செல்லும் பரிசு பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர். அதன்படி, நேற்று முன்தினம் வரை, தொகுதி முழுவதும், 11 லட்சத்து, 92 ஆயிரத்து, 360 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்நிலையில் நேற்று காலை, 7:00 மணிக்கு நிலையான கண்காணிப்பு அலுவலர் சாந்தாராமன் தலைமையிலான குழுவினர், வாகன சோதனை நடத்தினர். அப்போது, கரூர் மாவட்டத்தில் இருந்து, நாமக்கல் நோக்கி லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. லாரியை அணியாபுரத்தை சேர்ந்த மோகன், 42, என்பவர் ஓட்டி வந்தார். மோகனுார் - வாங்கல் பிரிவு சாலையில், நிலையான கண்காணிப்பு குழுவினர் நிறுத்தி சோதனை செய்தனர். தொடர்ந்து, உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து சென்ற, 2.55 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.

அதேபோல், ப.வேலுார், திருச்செங்கோடு, வேலகவுண்டம்பட்டி, மானத்தி பிரிவு, சேந்தமங்கலம், நாமக்கல், கீரம்பூர் ஆகிய பகுதிகளில் நடத்திய சோதனையில், 2.14 லட்சம் ரூபாய் மதிப்புள்ள லுங்கி உள்பட, மொத்தம், 21.33 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us