/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1 தேர்வெழுதும் 2,850 பேர்
/
டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1 தேர்வெழுதும் 2,850 பேர்
டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1 தேர்வெழுதும் 2,850 பேர்
டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1 தேர்வெழுதும் 2,850 பேர்
ADDED : ஜூலை 05, 2024 12:56 AM
கரூர்: டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1 தேர்வில் மாவட்டத்தில், 2,850 பேர் தேர்வு எழுதுகின்றனர் என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்-துள்ளார்.
அவர், வெளியிட்ட அறிக்கை:கரூர் மாவட்டத்தில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணை-யத்தால் நடத்தப்படும் குரூப் 1 முதல்நிலை எழுத்துத் தேர்வு வரும், 13ல் நடக்கிறது. கரூர் மாவட்டத்திற்கு தேர்வு செய்யப்-பட்ட, 11 மையங்களில், 2,850 தேர்வர்கள் தேர்வு எழுத உள்-ளனர். தேர்வு நாளன்று காலை, 9:00 மணிக்கு மேல் தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள். தேர்வர்கள் கருப்பு பந்து முனை பேனா மட்டும் பயன்படுத்த வேண்டும். போட்டோ அடையாளத்திற்காக ஏதாவது ஒரு அடையாள அட்-டையை வைத்துக் கொள்ளவும். பென்சில், ரப்பர், மொபைல், மின்னணு கடிகாரம் போன்ற எந்தவொரு மின்னணு சாதனங்க-ளையும் தேர்வு மையங்களுக்குள் கொண்டு செல்ல அனுமதி-யில்லை. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.