/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
13 இல்லங்களில், 306 முதியோர், குழந்தைகள் தங்கியுள்ளனர்:
/
13 இல்லங்களில், 306 முதியோர், குழந்தைகள் தங்கியுள்ளனர்:
13 இல்லங்களில், 306 முதியோர், குழந்தைகள் தங்கியுள்ளனர்:
13 இல்லங்களில், 306 முதியோர், குழந்தைகள் தங்கியுள்ளனர்:
ADDED : நவ 29, 2024 01:19 AM
13 இல்லங்களில், 306 முதியோர்,
குழந்தைகள் தங்கியுள்ளனர்: கலெக்டர்கரூர், நவ. 29-
மாவட்டத்தில் பதிவு பெற்ற, 13 இல்லங்களில், 306 முதியோர், குழந்தைகள் தங்கியுள்ளனர் என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்தார்.
கரூர் மாவட்டத்தில், பதிவு பெற்று செயல்பட்டு வரும் முதியோர் மற்றும் குழந்தைகள் இல்லங்களை நேற்று, கலெக்டர் தங்கவேல் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, அவர் கூறியதாவது:
அரசின் விதிமுறைகளின்படி, பதிவு செய்து கரூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் குழந்தைகள் இல்லங்கள், முதியோர் இல்லங்கள், மன வளர்ச்சி குன்றியோர்களுக்கான இல்லங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான இல்லங்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் விடுதிகள் ஆகியவற்றை அலுவலர்கள் தொடர் ஆய்வு செய்து வருகின்றனர்.
அதன் அடிப்படையில், கரூர் மாவட்டத்தில் சமூக நலத்துறை சார்பில், 10 முதியோர் இல்லங்களில், 229 முதியோர்களும், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புஅலகின் வாயிலாக, மூன்று குழந்தைகள் இல்லங்களில், 77 குழந்தைகளும் என மொத்தம், 13 இல்லங்களில், 306 பேர் தங்கியுள்ளனர்.
காந்திகிராமம் பகுதியில் உள்ள கேண்டில் டிரஸ்ட் குழந்தைகள் இல்லம், புன்னம் சத்திரம் சித்தார்த்தா முதியோர் இல்லம், மணல்மேடு ஐயப்ப சேவா சங்க முதியோர் பரிவாளையம் ஆகிய இல்லங்களில் தங்கியுள்ள குழந்தைகள், முதியோர்களிடம் தங்கும் அறை, சமையல் கூடம், கழிவறை, குடிநீர் வசதி, பொழுதுபோக்கு அம்சங்கள், தீ தடுப்பு சாதனங்கள், கண்காணிப்பு கேமரா, உணவு பொருட்களின் அட்டவணை மற்றும் உணவு பொருட்கள் தயாரிப்பதற்கான பொருட்களின் தரம் குறித்து கேட்டறியப்பட்டது. அவர்களுக்கு தேவையான மருத்துவ வசதிகள் மேற்கொள்ள, வாரம் ஒருமுறை நடமாடும் மருத்துவ குழுவினர் மூலம் சிகிச்சை அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவ்வாறு, கூறினார்.
ஆய்வின் போது மாவட்ட சமூக நல அலுவலர் சுவாதி, மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் பிரியா
உடனிருந்தனர்.