ADDED : ஜன 27, 2025 03:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை,: குடியரசு தினவிழாவையொட்டி, குளித்தலை அடுத்த மருதுார் டவுன் பஞ்., அலுவலகத்தில், நேற்று காலை, 9:00 மணி க்கு, தேசியக்கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. செயல் அலுவலர் காந்த-ரூபன் தலைமை வகித்தார்.
தேசியக்கொடியை டவுன் பஞ்., தலைவர் ராஜேஸ்வரி ஏற்றினார். துணைத்தலைவர் அன்பழகன் மற்றும் கவுன்சிலர்கள், அலுவலக பணியாளர்கள் பலர் கலந்து-கொண்டனர். இதேபோல், மருதுார் டவுன் பஞ்சாயத்தில் தலைவர் சகுந்தலா, நல்லுார் பஞ்சாயத்து அலுவலகத்தில், முன்னாள் பஞ்., தலைவர் கலா ஆகியோர் தேசியக்கொடி ஏற்-றினர். குமாரமங்கலம் பஞ்., மேல ஆரியம்பட்டியில் கிராம சபை கூட்டம், பஞ்., செயலாளர் மதியழகன் தலை-மையில் நடந்தது. இதே போல், குளித்தலை, தோகைமலை யூனியன் பகுதியில் உள்ள, 33 பஞ்சாயத்துகளில், கிராம சபை கூட்டம் நடந்தது.