/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பட்டுக்கூடு 386 கிலோ ரூ.2.23 லட்சத்திற்கு ஏலம்
/
பட்டுக்கூடு 386 கிலோ ரூ.2.23 லட்சத்திற்கு ஏலம்
ADDED : டிச 17, 2024 07:29 AM
ராசிபுரம்: ராசிபுரத்தில் கூட்டுறவு பட்டுக்கூடு விற்பனை நிலையம் உள்ளது. தினசரி இங்கு பட்டு விற்பனை நடந்து வருகிறது. நாமக்கல், கரூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பட்டு விவசாயிகள் ராசிபுரத்திற்கு வந்து பட்டுக்கூடுகளை விற்பனை செய்து வருகின்றனர்.
தொடர் மழை காரணமாக, கடந்த சில நாட்களாக பட்டுக்கூடு வரத்து இல்லாமல் இருந்தது. ஒரு வாரத்திற்கு பின், நேற்று தான், 100 கிலோவிற்கு மேல் விற்பனைக்கு வந்திருந்தது. நேற்று, 386.3 கிலோ பட்டுக்கூடு விற்பனையானது. இதில், அதிகபட்சம்
கிலோ, 633 ரூபாய்க்கும், குறைந்தபட்சம், 366 ரூபாய்க்கும் விற்பனையானது. 386.3 கிலோ பட்டுக்கூடு, 2.23 லட்சம் ரூபாய்க்கு
விற்பனையானது. சராசரியாக கிலோ, 580 ரூபாய்க்கு விற்பனையானது.