/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் அபய பிரதான ரங்கநாத சுவாமி கோவிலில் 3ம் நாள் ராப்பத்து உற்சவம்
/
கரூர் அபய பிரதான ரங்கநாத சுவாமி கோவிலில் 3ம் நாள் ராப்பத்து உற்சவம்
கரூர் அபய பிரதான ரங்கநாத சுவாமி கோவிலில் 3ம் நாள் ராப்பத்து உற்சவம்
கரூர் அபய பிரதான ரங்கநாத சுவாமி கோவிலில் 3ம் நாள் ராப்பத்து உற்சவம்
ADDED : ஜன 13, 2025 03:32 AM
கரூர்: கரூர் அபய பிரதான ரங்கநாத சுவாமி கோவிலில், நேற்று மூன்றாம் நாள் ராப்பத்து உற்சவம் நடந்தது.
கரூரில் பிரசித்தி பெற்ற அபய பிரதான ரங்கநாத சுவாமி கோவிலில் கடந்த, 31ல் வைகுண்ட ஏகாதசி திருவிழா, பகல் பத்து உற்சவத்துடன் தொடங்கியது. கடந்த, 9 இரவு மூலவர் மோகினி அலங்காரம், நாச்சியார் திருக்கோலத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 10ல் சொர்க்க வாசல் திறப்பு விழா நடந்தது. அதை தொடர்ந்து, ராப்பத்து உற்சவம் தொடங்கியது. நேற்று, மூன்றாம் நாள் ராப்பத்து உற்சவம் நடந்தது. அதில், வெண்ணை-தாழி கிருஷ்ணன் வேடத்தில், உற்சவர் பக்தர்களுக்கு அருள்பா-லித்தார். அப்போது, ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்-டனர்.