/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
4 டிப்பர் லாரியில் செம்மண்கடத்தல்; போலீசார் பறிமுதல்
/
4 டிப்பர் லாரியில் செம்மண்கடத்தல்; போலீசார் பறிமுதல்
4 டிப்பர் லாரியில் செம்மண்கடத்தல்; போலீசார் பறிமுதல்
4 டிப்பர் லாரியில் செம்மண்கடத்தல்; போலீசார் பறிமுதல்
ADDED : ஏப் 03, 2025 01:37 AM
4 டிப்பர் லாரியில் செம்மண்கடத்தல்; போலீசார் பறிமுதல்
குளித்தலை:குளித்தலை சப்-கலெக்டர் சுவாதிஸ்ரீ உத்தரவின்படி, தோகைமலை பகுதியில் மணல், மண். கிராவல் மற்றும் கற்கள் கடத்துபவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வருவாய் துறையினரு உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து, வடசேரி பஞ்.. பகுதியில் நேற்று முன்தினம் மாலை, வி.ஏ.ஒ., சதீஷ் தலைமையில் கூட்டு புலன் தணிக்கை மேற்கொண்டிருந்தார்.
அப்போது சட்டவிரோதமாக, செம்மண் திருட முயற்சி செய்து கொண்டிருந்த நான்கு டிப்பர் லாரிகளை பறிமுதல் செய்து, தோகைமலை போலீஸ் ஸ்டேஷன் கொண்டு வந்து புகார் அளித்துள்ளனர்.
இதையடுத்து, தோகைமலை போலீசார் வழக்கு பதிவு செய்து, தலைமறைவாக உள்ள டிப்பர் லாரிகளின் ஓட்டுனர்கள், உரிமையாளர்களை தேடி வருகின்றனர்.