sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

பானிபூரி வியாபாரிக்கு அடி பெண் உள்பட 4 பேர் கைது

/

பானிபூரி வியாபாரிக்கு அடி பெண் உள்பட 4 பேர் கைது

பானிபூரி வியாபாரிக்கு அடி பெண் உள்பட 4 பேர் கைது

பானிபூரி வியாபாரிக்கு அடி பெண் உள்பட 4 பேர் கைது


ADDED : ஜூன் 02, 2025 03:47 AM

Google News

ADDED : ஜூன் 02, 2025 03:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூரில் பானிபூரி வியாபாரியை, உருட்டு கட்டையால் அடித்ததாக பெண் உள்பட, நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் பகுதியை சேர்ந்தவர் குமார், 32; பானிபூரி வியாபாரி. இவர், கரூர் மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி, அமராவதி ஆற்றுப்பகுதி கருப்பாயி கோவில் தெருவில், பானிபூரி கடை போட்டிருந்தார். அப்போது, அதே பகுதியில் பானிபூரி கடை போட்டிருந்த நாமக்கல் பகுதியை சேர்ந்த பிரியா, 32, என்ற பெண்ணுக்கும், குமாருக்கும் கடந்த, 31ல் வாய் தகராறு ஏற்பட்டது. அதில், குமாரை, பிரியா மற்றும் அவருடன் இருந்த கருணாகரன், 25, சூர்யா, 25, அய்யனார், 25, ஆகிய நான்கு பேரும் சேர்ந்து, உருட்டு கட்டையால் அடித்தனர்.

அதில், காயமடைந்த குமார், கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து, குமாரின் தந்தை மாதேஷ், 54, கொடுத்த புகார்படி, பிரியா உள்பட, நான்கு பேரை கரூர் டவுன் போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us