/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வெறிநாய் கடித்து 4 பேருக்கு சிகிச்சை
/
வெறிநாய் கடித்து 4 பேருக்கு சிகிச்சை
ADDED : செப் 29, 2024 03:33 AM
நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை அடுத்த வேலம்பாளையம், தொப்பப்பட்டி, தொ.ஜேடர்பாளையம் போன்ற பகுதிகளில் தெரு நாய்கள் அதிக-ளவில் சுற்றித்திரிகின்றன. நேற்று காலை, தொப்பம்பட்டி காட்-டுக்கொட்டாய் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராகினி, 50, விவசாய வேலைக்கு சென்றுகொண்டிருந்தார்.
அப்போது, அவரை வெறிநாய் கடித்ததில் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதே பகுதியை சேர்ந்த பள்ளி மாணவன் ஸ்ரீதரன், 14, பழனியம்மாள், குமார் உள்ளிட்ட, 4 பேரை அந்த நாய் கடித்-ததாக கூறப்படுகிறது. காயமடைந்தவர்கள், தொ.ஜேடர்பா-ளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.சில மாதங்களுக்கு முன் இதேபோல் நாய்க்கடி சம்பவம் இப்ப-குதியில் நடந்துள்ளது. சாலையில் அதிகளவு நாய்கள் சுற்று-வதால் பொதுமக்கள் பயந்து கொண்டு செல்ல வேண்டியுள்ளது. எனவே, பஞ்., நிர்வாகம் நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.