/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் கலெக்டர் அலுவலக குறைதீர் கூட்டத்தில் 403 மனுக்கள் குவிந்தன
/
கரூர் கலெக்டர் அலுவலக குறைதீர் கூட்டத்தில் 403 மனுக்கள் குவிந்தன
கரூர் கலெக்டர் அலுவலக குறைதீர் கூட்டத்தில் 403 மனுக்கள் குவிந்தன
கரூர் கலெக்டர் அலுவலக குறைதீர் கூட்டத்தில் 403 மனுக்கள் குவிந்தன
ADDED : டிச 10, 2024 01:50 AM
கரூர், டிச. 10-
கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், பொதுமக்கள் குறைதீர் கூட்டம், கலெக்டர் தங்கவேல், தலைமையில் நடந்தது.
இதில் முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, வங்கிக்கடன், பட்டா மாறுதல், வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை, திருமண நிதியுதவி, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, உதவி உபகரணங்கள், குடிநீர் வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக, 403 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர்.
தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நான்கு பயனாளிகளுக்கு தலா, 7,800 ரூபாய்- மதிப்பில் மூன்று சக்கர சைக்கிள்களையும், ஒருவருக்கு ஆக்ஸிலரி ஊன்றுகோல், மற்றொருவருக்கு கருப்பு கண்ணாடி என மொத்தம் ஆறு பயனாளிகளுக்கு, 34 ஆயிரத்து, 900 ரூபாய்- மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
டி.ஆர்.ஓ., கண்ணன், குளித்தலை சப்-கலெக்டர் சுவாதி ஸ்ரீ, உதவி ஆணையர் (கலால்) கருணாகரன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மோகன்ராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.