sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 16, 2025 ,புரட்டாசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மாவட்டம் முழுவதும் 415 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை

/

மாவட்டம் முழுவதும் 415 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை

மாவட்டம் முழுவதும் 415 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை

மாவட்டம் முழுவதும் 415 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை


ADDED : ஆக 28, 2025 01:54 AM

Google News

ADDED : ஆக 28, 2025 01:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், கரூர் மாவட்டம் முழுவதும், 415 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. கரூரில் இன்று மாலை, விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, காவிரியாற்றில் விசர்ஜனம் செய்யப்பட உள்ளது.

நாடு முழுவதும் நேற்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. கரூர் மாவட்டத்தில், ஹிந்து முன்னணி, பா.ஜ., -வி.எச்.பி., -சிவசேனா, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட, பல்வேறு அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் கரூர், வேலாயுதம்பாளையம், குளித்தலை, அரவக்குறிச்சி, சின்னதாராபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், 415 விநாயகர் சிலைகள் சிறப்பு பூஜைகளுடன் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் முன், ஹிந்து முன்னணி சார்பில் நேற்று காலை, 10 அடி உயரம் உள்ள காமதேனுவுடன் கூடிய விநாயகர் சிலை, ேஹாமம் மற்றும் சிறப்பு பூஜையுடன் பிரதிஷ்டை செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் விநாயகரை வழிபட்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள், இன்று மாலை, 6:00 மணிக்கு, 80 அடி சாலைக்கு கொண்டு வரப்படுகிறது. பிறகு, விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, வாங்கல் காவிரியாற்றில் விசர்ஜனம் செய்யப்பட உள்ளது. அதேபோல், க.பரமத்தியில் இருந்து விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு,

தவிட்டுப்பாளையம் காவிரியாற்றில் விசர்ஜனம் செய்யப்படுகிறது.

அதேபோல் சின்னதாராபுரம், அரவக்குறிச்சி பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள சிலைகள், அமராவதி ஆற்றில், நாளை மாலை விசர்ஜனம் செய்யப்படுகிறது. குளித்தலையில் நாளை, விநாயகர் சிலைகள் காவிரியாற்றில் விசர்ஜனம் செய்யப்பட உள்ளது.

* கரூர், அண்ணா சாலை கற்பக விநாயகர் கோவிலில் நேற்று காலை, 7:00 மணிக்கு வேத பாராயணம், மூர்த்தி ேஹாமங்களுடன் தொடங்கியது. 9:00 முதல், 10:30 மணி வரை மூலவர் விநாயகருக்கு, 18 வகையான வாசனை திரவியங்கள் மூலம் அபி ேஷகம் நடந்தது. தொடர்ந்து, மூலவர் கற்பக விநாயகர் தங்க கவசத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மஹா தீபாராதனைக்கு பிறகு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

அதேபோல், கரூர் எல்.ஜி.பி., நகர் குபேர சக்தி விநாயகர் கோவில், ரங்கநாயகிபுரம் ஸ்ரீ சக்தி விநாயகர் கோவில், பசுபதிபுரம் வேம்பு மாரியம்மன் கோவில் ஆகியவற்றில், மூலவர் விநாயகர் சந்தன காப்பு அலங்காரத்திலும், ஜவஹர் பஜாரில் செல்வ விநாயகர் கோவில், அண்ணாநகர் கற்பக விநாயகர் கோவில் ஆகியவற்றில், மூலவர் சந்தன காப்பு அலங்காரத்திலும் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us