sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கரூர் மாவட்டத்தில் 5 போலீஸ் ஸ்டேஷன்கள் தரம் உயர்வு

/

கரூர் மாவட்டத்தில் 5 போலீஸ் ஸ்டேஷன்கள் தரம் உயர்வு

கரூர் மாவட்டத்தில் 5 போலீஸ் ஸ்டேஷன்கள் தரம் உயர்வு

கரூர் மாவட்டத்தில் 5 போலீஸ் ஸ்டேஷன்கள் தரம் உயர்வு


ADDED : ஆக 06, 2025 01:29 AM

Google News

ADDED : ஆக 06, 2025 01:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், கரூர் மாவட்டத்தில், ஐந்து சட்டம்-ஒழுங்கு போலீஸ் ஸ்டேஷன்கள், இன்ஸ்பெக்டர் நியமனம் செய்யும் வகையில், தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மேற்பார்வையில், எஸ்.ஐ., தலைமையில் இயங்கும் சட்டம்-ஒழுங்கு போலீஸ் ஸ்டே ஷன்கள் செயல்படுகின்றன. அதில், பல போலீஸ் ஸ்டேஷன்களை, இன்ஸ்பெக்டர்கள் பணி நியமனம் செய்யும் வகையில், தரம் உயர்த்த தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி, தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம், 280 சட்டம்- ஒழுங்கு போலீஸ் ஸ்டேஷன்கள் தரம் உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டது.

கரூர் மாவட்டத்தில் வாங்கல், தான்தோன்றிமலை, வெள்ளியணை, சின்னதாராபுரம் மற்றும் தென்னிலை ஆகிய ஐந்து சட்டம்-ஒழுங்கு போலீஸ் ஸ்டேஷன்கள், எஸ்.ஐ.,க்கள் தலைமையில் இயங்கி வருகிறது. தற்போது, ஐந்து போலீஸ் ஸ்டேஷன்களும், இன்ஸ்பெக்டர்கள் பணி நியமனம் செய்யும் வகையில், தரம் உயர்த்தப்பட்டுள்ளது. விரைவில், ஐந்து போலீஸ் ஸ்டேஷன்களுக்கும், இன்ஸ்பெக்டர்கள் தனியாக பணி நியமனம் செய்யப்பட உள்ளனர்.

கரூர் மாவட்டத்தில் இதுவரை, பசுபதிபாளையம், தான்தோன்றிமலை, வெள்ளியணை ஆகிய, மூன்று போலீஸ் ஸ்டேஷன்கள் ஒரே இன்ஸ்பெக்டர் தலைமையில் இயங்கி வந்தது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us