/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வானவில் மன்ற போட்டி 50 மாணவர்கள் பங்கேற்பு
/
வானவில் மன்ற போட்டி 50 மாணவர்கள் பங்கேற்பு
ADDED : நவ 22, 2025 02:14 AM
நாமக்கல், முதன்மை கல்வி அலுவலர் எழிலரசி வழிகாட்டுதல்படி, ஒன்றிய அளவிலான வானவில் மன்ற போட்டி, நாமக்கல் வட்டார வளமையத்தில் நடந்தது.
வட்டார வளமைய மேற்பார்வையாளர் சசிராணி தலைமை வகித்து தொடங்கி வைத்தார். 'உலகளாவிய பிரச்னைகளுக்கு, உள்ளூர் அளவில் தீர்வு காணுதல்' என்ற தலைப்பின் கீழ், மாணவர்கள் அறிவியல் மற்றும் கணித செயல்பாடுகளை பயன்படுத்தி, எவ்வாறு அறிவியல் அணுகு முறையில் தீர்வு காணலாம் என்று மாதிரிகள் மற்றும் செயல்திட்டம் மூலம் விளக்கினர்.
இதில், நாமக்கல் ஒன்றியத்தை சேர்ந்த அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில், ஆறு முதல், எட்டாம் வகுப்பு வரை படிக்கும், 50 மாணவர்கள் பங்கேற்றனர். போட்டியில் வெற்றி பெறும் மாணவர்கள், மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்பர்.

