/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மனநலம் பாதிக்கப்பட்ட 50 வயது பெண் மீட்பு
/
மனநலம் பாதிக்கப்பட்ட 50 வயது பெண் மீட்பு
ADDED : ஆக 05, 2025 01:00 AM
குளித்தலை, குளித்தலை அடுத்த, கழுகூர் பஞ்., அ.உடையாபட்டி பகுதியில், 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கடந்த, 10 நாட்களாக உணவு கிடைக்காமலும், பாதுகாப்பு இல்லாமலும், வீதிகளில் தனக்குத் தானே பேசிக்கொண்டும், சில நேரங்களில் கற்களை கடைகள் மீது எரிந்தும் சுற்றி வந்தார்.
பெண்ணை மீட்டு உணவு, சிகிச்சை மற்றும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என, அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் சரவணன், தோகைமலை போலீஸ் மற்றும் சாந்திவனம் மனநல காப்பகத்திற்கு தகவல் அளித்தார்.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் ஜெயராமன், எஸ்.ஐ., பாலசுப்பிரமணி, எஸ்.எஸ்.ஐ., ரசியா மற்றும் சாந்திவனம் மனநல காப்பக பணியாளர்கள் அ.உடையாபட்டி பகுதியில் ஆய்வு செய்தனர்.
அப்போது ஆதரவு மற்றும் பாதுகாப்பு இல்லாமல் சுற்றித்திரிந்த பெண்ணுக்கு சிகிச்சை அளிக்க இன்ஸ்பெக்டர் ஜெயராமன் பரிந்துரை செய்தார்.
பின் சாந்திவனம் மனநல காப்பக இயக்குனர் அரசப்பன் மேற்பார்வையில், ஒருங்கிணைப்பாளர் தீனதயாளன், மனநல சமூகப்பணியாளர்கள் மரிய ஜெர்சில்லா, செவிலியர் கவிப்பரியா, ஓட்டுனர் வேல்முருகன் ஆகியோர் கொண்ட குழுவினர் பெண்ணை மீட்டு, ஆத்மா மனநல மருத்துவமனையில் அனுமதித்தனர்.