ADDED : ஜூலை 22, 2025 01:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை குளித்தலை அடுத்த, மேல் நங்கவரம் பழைய ரைஸ் மில் அருகே பணம் வைத்து சூதாடுவதாக நங்கவரம் போலீசாருக்கு வந்த ரகசிய தகவலின்படி, நேற்று முன்தினம் மாலையில் போலீசார் சம்பவ இடத்தை சுற்றி வளைத்த போது, பணம் வைத்து சூதாடிய ஸ்டிக்கர் கடை சதீஷ், 32. கண்ணன், 48.
பெரியசாமி, 45. ராமு, 45. பிச்சை, 40. வேலு,33. ஆகிய 6 பேரை கைது செய்து, அவர்களிடம் இருந்து, 450 ரூபாய் பறிமுதல் செய்தனர்.நங்கவரம் போலீசார் 6 பேர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.