sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

68,054 கிலோ சோளம் விதை கொள்முதல்: கலெக்டர் தகவல்

/

68,054 கிலோ சோளம் விதை கொள்முதல்: கலெக்டர் தகவல்

68,054 கிலோ சோளம் விதை கொள்முதல்: கலெக்டர் தகவல்

68,054 கிலோ சோளம் விதை கொள்முதல்: கலெக்டர் தகவல்


ADDED : டிச 22, 2024 01:40 AM

Google News

ADDED : டிச 22, 2024 01:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், டிச. 22-

தமிழ்நாடு விதை மேம்பாட்டு கழகத்தின் மூலம், 68,054 கிலோ சோளம் விதைகள் கொள்முதல் செய்யப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்தார்.

கிருஷ்ணராயபுரம் தாலுகா, முனையனுார் கிராமத்தில் தமிழக அரசின் சாகுபடி மானியம் பெற்ற இடத்தை கலெக்டர் தங்கவேல் பார்வையிட்டார்.

அப்போது, அவர் கூறியதாவது:

கரூர் மாவட்டத்தில், பல்வேறு விவசாயிகளின் நிலத்தில், சாகுபடி மானியம் வழங்கி தரமான விதைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. அவ்வாறு உற்பத்தி செய்யப்படும் விதைகளை, அரசின் விதை பண்ணைகளில் பாதுகாப்பாக சேகரிக்கப்பட்டு, விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படுகிறது.

அந்த வகையில், தமிழ்நாடு விதை மேம்பாட்டு கழகம் மூலம் நெல், சிறுதானிய விதைகள், பயறு விதைகளை விவசாயிகளுக்கு வினியோகம் செய்திட விதை கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, 10 வகையான நெல் ரகங்கள், 117 ஹெக்டர் பரப்பளவில் நெல் விதை உற்பத்தி செய்யப்பட்டு, 67,053 கிலோ கொள்முதல் செய்யப்பட்டு, 5.36 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்பட்டுள்ளது.

உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்கம் மூலம் சோளம் 68,054 கிலோ கொள்முதல் செய்யப்பட்டு, 20.42 லட்சம் லட்சம் மானியம் வழங்கப்பட்டுள்ளது, கம்பு, 6,574 கிலோ கொள்முதல் செய்யப்பட்டு, 1.98 லட்சம் மானியம் வழங்கப்பட்டுள்ளது, உளுந்து 30,710 கிலோ கொள்முதல் செய்யப்பட்டு, 7.7 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்பட்டுள்ளது, துவரை 3,383 கிலோ கொள்முதல் செய்யப்பட்டு, 84 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்பட்டுள்ளது, நிலக்கடலை 68,457 கிலோ கொள்முதல் செய்யப்பட்டு, 17.12 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்பட்டுள்ளது, எள், 1,300 கிலோ கொள்முதல் செய்யப்பட்டு, 32 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்பட்டுள்ளது.

மொத்தமாக பல்வேறு தானியங்கள் பல்வேறு திட்டங்களில், 2,45,530 கிலோ கொள்முதல் செய்யப்பட்டு அவைகளுக்கு, 53.71 லட்சம் ரூபாய் மானியமாக வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கூறினார்.






      Dinamalar
      Follow us