/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கொலை மிரட்டல் விடுத்த இருவர் மீது வழக்கு பதிவு
/
கொலை மிரட்டல் விடுத்த இருவர் மீது வழக்கு பதிவு
ADDED : செப் 19, 2024 07:27 AM
குளித்தலை: குளித்தலை, மணத்தட்டை திருவள்ளுவர் நகரை சேர்ந்த பகத்சிங், 26, தனியார் நிறுவனத்தில் கண்காணிப்பாளராக வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு, 7:30 மணியளவில் பாம்பலம்மன் கோவில் அருகில் நின்று கொண்டு இருந்தார்.
அப்போது. தெற்கு தேவதானம் கிராமத்தை சேர்ந்த பூவரசன், புரு-சோத்தமன், 23, ஆகியோர் அதிவேகமாக பைக்கில் சென்றனர்.
அப்போது பகத்சிங், பைக்கில் வேகமாக செல்லலாமா என்று கேட்டதற்கு, இரண்டு வாலிபர்களும் தகாத வார்த்தையால் திட்டி, கீழே
கிடந்த கல்லை எடுத்து காண்பித்து, கொலை செய்து விடு-வதாக மிரட்டல் விடுத்தனர்.இதுகுறித்து பகத்சிங் கொடுத்த புகார்படி, குளித்தலை போலீசார் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து, புருசோத்தமனை கைது செய்தனர்.

