/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர் மீது கொலை மிரட்டல் வழக்கு பதிவு
/
மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர் மீது கொலை மிரட்டல் வழக்கு பதிவு
மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர் மீது கொலை மிரட்டல் வழக்கு பதிவு
மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர் மீது கொலை மிரட்டல் வழக்கு பதிவு
ADDED : ஜூலை 02, 2024 07:21 AM
கரூர் : கரூர் அருகே, தொழில் அதிபரிடம் நிலத்தை எழுதி தரும்படி மிரட்டிய புகாரில், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட பலர் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
கரூர் மாவட்டம், வாங்கல் காட்டூர் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ், 50; நாமக்கல் மாவட்டம், பர-மத்தி வேலுாரில் எலக்ட்ரிகல் நிறுவனம் நடத்தி வருகிறார்.இவர், கரூர் மாவட்ட அ.தி.மு.க., செயலரும், முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர், அவ-ரது தம்பி முன்னாள் பஞ்., தலைவர் சேகர் உள்-ளிட்ட பலர் தோரணகல்பட்டி, குன்னம்பட்டியில் உள்ள, 22 ஏக்கர் நிலத்தை எழுதி தரும்படி மிரட்டி-யதாகவும், தன்னிடம் கடனாக வாங்கிய, 10 கோடி ரூபாய் மற்றும் வட்டியை திருப்பி தர கேட்-டபோது மிரட்டியதாக கடந்த மாதம், 22ல் வாங்கல் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார்.
இதையடுத்து, வாங்கல் போலீசார் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், அவரது தம்பி சேகர் உள்பட பலர் மீது கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட, பல்வேறு பிரிவுகளின் மீது வழக்குப்ப-திவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஏற்கனவே கரூர் அருகே தோரணகல்பட்டி, குன்-னம்பட்டி பகுதியில் உள்ள நிலத்தை, போலியான ஆவணங்கள் மூலம், கிரையம் செய்து கொண்ட-தாக யுவராஜ் உள்ளிட்ட ஏழு பேர் மீது, கரூர் மேலக்கரூர் சார்ப்பதிவாளர் முகமது அப்துல் காதர் அளித்த புகார் மீது, சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்து வருகினறனர். இந்த வழக்கில் தன்னை கைது செய்ய விடாமல் இருக்க, விஜய-பாஸ்கரின் முன் ஜாமின் மனுவை, கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் கடந்த, 25ல் தள்ளு-படி செய்தது. இதனால் விஜயபாஸ்கர், 15 நாட்க-ளுக்கும் மேலாக தலைமறைவாக உள்ளார்.
இந்நிலையில், எலக்ட்ரிக்கல் நிறுவன அதிபர் பிரகாஷ் கொடுத்த புகார்படி, வாங்கல் போலீ-சாரும், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்-ளிட்ட பலர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.