sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

அபயபிரதான ரெங்கநாதர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் கோலாகலம்

/

அபயபிரதான ரெங்கநாதர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் கோலாகலம்

அபயபிரதான ரெங்கநாதர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் கோலாகலம்

அபயபிரதான ரெங்கநாதர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் கோலாகலம்


ADDED : மே 09, 2025 02:35 AM

Google News

ADDED : மே 09, 2025 02:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்,

சித்திரை திருவிழாவையொட்டி, அபயபிரதான ரெங்கநாதர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.

கரூர் மேட்டுத்தெருவில், பிரசித்தி பெற்ற அபயபிரதான ரெங்கநாதர் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்தவகையில், சித்திரை திருவிழா கடந்த, 2 முதல் நடந்து வருகிறது. தினமும் மாலை அன்னப்பறவை வாகனம், சிம்ம வாகனம், அனுமன் வாகனம், வெள்ளி கருட வாகனம், சேஷ வாகனம், கருட வாகனம், யானை வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி திருவீதியுலா நடந்தது. நேற்று திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதையொட்டி ஸ்ரீதேவி, பூதேவி உடனாகிய ரெங்கநாதருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, அலங்காரம் செய்யப்பட்டது.

தொடர்ந்து கோவில் மண்டபத்தில் ஸ்ரீதேவி பூதேவியுடன் மணக்கோலத்தில் ரெங்கநாதர் எழுந்தருளினார். தொடர்ந்து சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதையடுத்து வேதமந்திரங்கள் முழங்க திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். நாளை(10ம் தேதி) தேரோட்டம், 11ல் அமராவதி ஆற்றில் தீர்த்தவாரி, 12ல் ஆளும் பல்லக்கு ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன.






      Dinamalar
      Follow us