ADDED : ஆக 07, 2026 05:43 AM
அ நிறம் | அளவு
கரூர்:புகழூர்
அருகே அன்னை நகர் பகுதியை சேர்ந்தவர் கணேசன், 50. இவரது வீட்டுக்குள்,
4 அடி நீளம் உள்ள கட்டுவிரியன் பாம்பு வந்துள்ளது.
இதைய பார்த்த
கணேசன், புகழூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு, தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர்.
பின்னர் பாம்பை லாவகமாக பிடித்து, வனப்பகுதியில் விட்டனர்.
