sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 20, 2025 ,மார்கழி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கேட்பாரற்று கிடக்கும் 'பேரிகார்டு'கள் விபத்தை தடுக்க பயன்படுத்த கோரிக்கை

/

கேட்பாரற்று கிடக்கும் 'பேரிகார்டு'கள் விபத்தை தடுக்க பயன்படுத்த கோரிக்கை

கேட்பாரற்று கிடக்கும் 'பேரிகார்டு'கள் விபத்தை தடுக்க பயன்படுத்த கோரிக்கை

கேட்பாரற்று கிடக்கும் 'பேரிகார்டு'கள் விபத்தை தடுக்க பயன்படுத்த கோரிக்கை


ADDED : பிப் 09, 2024 11:52 AM

Google News

ADDED : பிப் 09, 2024 11:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலைகளில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. ஆனால், அதை தடுக்க தயார் செய்யப்பட்ட, 'பேரிகார்டு'கள், கரூர் மாநகராட்சி அலுவலகம் முன், கேட்பாரற்று கிடக்கிறது.

கரூர் நகரை சுற்றி, மதுரை, திருச்சி, சேலம், கோவை நெடுஞ்சாலைகள், ஈரோடு மாநில நெடுஞ்சாலைகள் செல்கின்றன. அதில், நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்றவண்ணம் உள்ளது. தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இணையும், கிராம சாலை பகுதிகளில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.

இதனால், அதிகளவில் விபத்து ஏற்படும், கோடங்கிப்பட்டி பிரிவு, வெங்ககல்பட்டி பிரிவு, வீரராக்கியம் பிரிவு, சுக்காலியூர் பிரிவு மற்றும் மண்மங்கலம் பகுதியில், காவல் துறை சார்பில், 'பேரிகார்டு'கள் வைக்கப்பட்டுள்ளன.

மேலும், பல இடங்களில் வைக்க தயார் செய்யப்பட்ட, 15க்கும் மேற்பட்ட, 'பேரிகார்டு'கள், கரூர் மாநகராட்சி அலுவலகம் முன், கேட்பாரற்று கிடக்கிறது. அதை, போக்குவரத்து பிரிவு, காவல் துறை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.

இதனால், 'பேரிகார்டு'கள் சேதமடையும் நிலையில் உள்ளது.

எனவே, கரூர் மாநகராட்சி அலுவலகம் முன், கேட்பாரற்று கிடக்கும், 'பேரிகார்டு'களை விபத்து ஏற்படும் பகுதிகளில் வைக்க, போக்குவரத்து பிரிவு காவல்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.






      Dinamalar
      Follow us