/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
குடிபோதையில் தவறி விழுந்த வாலிபர் பலி
/
குடிபோதையில் தவறி விழுந்த வாலிபர் பலி
ADDED : அக் 22, 2024 01:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர், அக். 22-
கரூரில், குடிபோதையில் தவறி விழுந்த வாலிபர் உயிரிழந்தார்.
கரூர் மாவட்டம், கடவூர் மத்தகிரி பகுதியை சேர்ந்த மாணிக்கம் என்பவரது மகன் செந்தில், 40; இவர் கடந்த, 14ல் கரூர் உழவர் சந்தை அருகே, குடிபோதையில் தவறி கீழே விழுந்தார். அதில், தலையில் பலத்த அடிபட்டு, கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் உயிரிழந்தார். கரூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.