ADDED : ஆக 18, 2026 04:54 AM
அ நிறம் | அளவு
கரூர்; ஆடி மாத நிறைவையொட்டி, புகழூர் குளிர்ந்த மலை முனியப்பன் சுவாமி கோவிலில், பால்குட ஊர்வலம் நடந்தது.
ஆடி மாதம் நிறைவு நாளான நேற்று, கரூர் மாவட்டம், புகழூர் அருகே காவிரியாற்றில் இருந்து ஏராளமான பக்தர்கள் பால்குடம், தீர்த்த-குடம் எடுத்துக்கொண்டு ஊர்வலமாக முனி-யப்பன் கோவிலுக்கு சென்றனர். பின், மூலவர் முனியப்பன் சுவாமி, குழந்தை வடிவேல் சுவா-மிக்கு பால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் மூலவர்கள் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். மஹா தீபாராதனைக்கு பின், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து, உற்சவர் சுவாமி திருவீதி உலா நடந்-தது.
