sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

நாளை ஆடிப்பெருக்கு விழா: கரூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு

/

நாளை ஆடிப்பெருக்கு விழா: கரூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு

நாளை ஆடிப்பெருக்கு விழா: கரூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு

நாளை ஆடிப்பெருக்கு விழா: கரூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு


ADDED : ஆக 02, 2025 01:49 AM

Google News

ADDED : ஆக 02, 2025 01:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், ஆடிப்பெருக்கு விழாவையொட்டி, கரூர் மாவட்டத்தில் காவிரி, அமராவதி கரையோர பகுதி களில், பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழர்களின் முக்கிய திருவிழாவான, ஆடிப்பெருக்கு நாளை கொண்டாடப்படுகிறது.

இதனால், கரூர் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான பொது மக்கள், காவிரி மற்றும் அமராவதி ஆற்றில் நாளை புனித நீராட உள்ளனர். கரூர் மாவட்டத்தில், காவிரியாறு பகுதிகளான வேலாயுதம்பாளையம், புகழூர், வாங்கல், நெரூர், குளித்தலை மற்றும் மாயனுாரில், ஆடிப்பெருக்கையொட்டி வழக்கமாக குளிப்பது வழக்கம். அதேபோல், அமராவதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பெரியாண்டாங்கோவில் தடுப்பணை, கொத்தப்பாளையம் தடுப்பணை, சின்னதாராபுரம், ராஜபுரம் பகுதி யில் பொதுமக்கள் குளிப்பர். இதனால், 300க்கும் மேற்பட்ட போலீசார் சம்பந்தப்பட்ட இடங்களில், பாதுகாப்பு பணியில் நாளை ஈடுபட உள்ளனர்.

கரூர் மாவட்டத்தில், பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான, காவிரியாற்றின் கரையோரம் பகுதியான நெரூரில் சதாசிவ பிரமேந்திரர் அதிஷ்டானம் உள்ளது. நாளை ஆடிப்பெருக்கு விழாவுக்காக, நெரூர் செல்லும் பொதுமக்கள் காவிரியாற்றில் புனித நீராடுவதால், அங்கும் போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us