ADDED : ஆக 29, 2025 01:18 AM
அ நிறம் | அளவு
கரூர், கரூர் மாநகராட்சியில், 48 வார்டுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. இங்குள்ள, தெருக்களை தெரிந்து கொள்ள வசதியாக, மாநகராட்சி சார்பில் பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் பெயர் பலகை சாய்ந்தும், சேதமடைந்த நிலையில் உள்ளது. அதில் உள்ள பெயர்களும், அறிந்து கொள்ள முடியாத வகையில் சிதைந்துள்ளது.
இதனால், புதிதாக வரும் வாகன ஓட்டிகள், குழப்பம் அடைகின்றனர். தாங்கள் செல்லும் வழியை தெரிந்து கொள்ள முடியாமல் திணறுகின்றனர். எனவே புதிய பெயர் பலகையை வைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
