ADDED : அக் 25, 2024 08:08 AM
கரூர்: மாநகராட்சி ஒப்பந்த நிறுவனங்களை கண்டித்து, ஆதித்தமிழர் பேரவை சார்பில் கரூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் பாரதி தலைமை வகித்தார். கரூர் மாநகராட்சியில், துாய்மை பணிக்கு ஒப்-பந்தம் செய்யப்பட்ட தனியார் நிறுவனம், பணி-யாளர்களில் நலன்களை கண்டுகொள்ளாமல் இருக்கிறது. இது குறித்து புகார் அளித்தும் மாநக-ராட்சி நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, உள்-ளாட்சி அமைப்புகளில் தனியார் நிறுவனங்-களில் ஒப்பந்தங்களை ரத்து செய்து, நேரடியாக பணி வழங்க வேண்டும். துாய்மை பணியாளர்க-ளுக்கு மாத ஊதியம், 30 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். பல ஆண்டுகளாக ஒப்பந்த தொழிலா-ளர்களாக பணிபுரியம் துாய்மை பணியாளர்-களை நிரந்தரம் செய்ய வேண்டும். கரூர் கலெக்டர் அலுவலகத்தில், விபத்தில் சிக்கிய துாய்மை பணியாளருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். மருந்துவம், விபத்து காப்பீடு வழங்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்-கைகள் வலியுறுத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில், துாய்மை பணியாளர் அணி மாநில தலைவர் பாண்டியன், மாவட்ட தலைவர் செந்தில்மணி உள்பட பலர் பங்கேற்றனர்.

