/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ரூ.30.38 லட்சம் மதிப்புள்ள வேளாண் பொருட்கள் ஏலம்
/
ரூ.30.38 லட்சம் மதிப்புள்ள வேளாண் பொருட்கள் ஏலம்
ADDED : ஆக 07, 2024 07:37 AM
கரூர்: சாலைபுதுார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், 30.38 லட்சத்துக்கு வேளாண் பொருட்கள் ஏலம் நடந்தது.கரூர், க.பரமத்தி பகுதிகளில், ஆயிரக்கணக்கான ஏக்கரில் தேங்காய் சாகுபடி நடக்கிறது.
இங்கு தேங்காய்களை உடைத்து, காய வைத்து தங்களது தேவைக்கு எண்ணெய் எடுத்தது போக மீதமுள்ள பருப்பு, தேங்காய்களை நொய்யல் அருகில் உள்ள சாலைபுதுார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடக்கும் ஏலத்துக்கு விவசாயிகள் கொண்டு செல்கின்றனர். ஏலத்தில், 10 ஆயிரத்து, 190 தேங்காய்களை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். ஒரு கிலோ குறைந்தபட்சமாக, 24.30 ரூபாய், அதிகபட்சமாக, 31.89 ரூபாய், சராசரியாக, 28.79 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம், 3,310 கிலோ எடையுள்ள தேங்காய்கள், 94 ஆயிரத்து, 530 ரூபாய்க்கு விற்பனையானது.கொப்பரை தேங்காய் முதல்தரம் ஒரு கிலோ குறைந்தபட்சமாக, 95.99 ரூபாய், அதிகபட்சமாக, 98.29 ரூபாய், சராசரியாக, 97.99 ரூபாய், இரண்டாம் தரம் குறைந்தபட்சமாக, 68.89 ரூபாய், அதிகபட்சமாக, 95.56 ரூபாய், சராசரியாக, 90.39 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தமாக, 30 ஆயிரத்து, 12 கிலோ எடையுள்ள கொப்பரை தேங்காய், 27 லட்சத்து, 79 ஆயிரத்து, 870 ரூபாய்க்கு விற்பனையானது. நேற்று நடந்த நிலக்கடலை ஏலத்தில், 77 மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். ஒரு கிலோ குறைந்தபட்சமாக, 64.50 ரூபாய், அதிகபட்சமாக, 69.50 ரூபாய், சராசரியாக, 67.80 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம், 2,499 கிலோ எடையுள்ள நிலக்கடலை, 1 லட்சத்து, 63 ஆயிரத்து, 700 ரூபாய்க்கு விற்பனையானது. மொத்தமாக தேங்காய், கொப்பரை தேங்காய், நிலக்கடலை சேர்த்து, 30 லட்சத்து, 38 ஆயிரத்து, 100 ரூபாய்க்கு விற்பனை நடந்தது.