/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அம்மா உணவகம்: மக்கள் எதிர்பார்ப்பு
/
மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அம்மா உணவகம்: மக்கள் எதிர்பார்ப்பு
மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அம்மா உணவகம்: மக்கள் எதிர்பார்ப்பு
மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அம்மா உணவகம்: மக்கள் எதிர்பார்ப்பு
ADDED : மார் 20, 2024 01:44 AM
கரூர்:கரூர்
அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவ மனையில், அம்மா உணவகம் அமைக்க
வேண்டும் என, நோயாளிகள், பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
கரூர்
நகரின் மையப்பகுதியில், அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை
செயல்பட்டு வந்தது. அதில் அம்மா உணவகம் செயல்பட்டது. இந்நிலையில்,
கரூர்-திருச்சி சாலை காந்தி கிராமத்தில், 300 கோடி ரூபாய் செலவில்
புதிய மருத்துவமனை கட்டிடம் கட்டப்பட்டு, 2019ல், அப்போதைய
முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.
இதையடுத்து, பழைய
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தாய்மார்கள், உள் நோயாளிகள்
பிரிவு, புறநோயாளிகள் பிரிவு புதிய மருத்துவ கல்லுாரி மருத்துவமனை
கட்டிடத்துக்கு மாற்றப்பட்டது. சித்த மருத்துவ பிரிவை தவிர,
பல்வேறு மருத்துவ பிரிவுகளும், புதிய கட்டிடத்துக்கு
மாற்றப்பட்டது. ஆனால், அம்மா உணவகம் அமைக்கப்படவில்லை.
நாள்தோறும்
வெளிப்புற நோயாளிகள், 500க்கும் மேற்பட்டவர்கள் வருகின்றனர்.
300க்கும் மேற்பட்ட உள் நோயாளிகளுக்கு, மருத்துவமனை தரப்பில் உணவு
வழங்கப்படுகிறது. ஆனால், வெளிப்புற நோயாளிகள், உள் நோயாளிகளின்
உறவினர்கள், பார்வையாளர்கள் கரூர் மருத்துவ கல்லுாரி
மருத்துவமனைக்கு வந்து செல்லும் போது, குறைந்த செலவில் உணவு
பொருட்களை வாங்க முடியாமல் தவிக்கின்றனர்.
எனவே, மருத்துவ
கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில், மலிவு விலையில் உணவு பொருட்களை
வாங்கும் வகையில், அம்மா உணவகம் அமைக்க வேண்டும் என, பொது மக்கள்
எதிர்பார்ப்பில் உள்ளனர்.

