/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் ரயில்வே ஸ்டேஷனில் அம்ருத் பாரத் திட்டப்பணிகள் விறு விறு
/
கரூர் ரயில்வே ஸ்டேஷனில் அம்ருத் பாரத் திட்டப்பணிகள் விறு விறு
கரூர் ரயில்வே ஸ்டேஷனில் அம்ருத் பாரத் திட்டப்பணிகள் விறு விறு
கரூர் ரயில்வே ஸ்டேஷனில் அம்ருத் பாரத் திட்டப்பணிகள் விறு விறு
ADDED : செப் 13, 2025 01:33 AM
கரூர், கரூர் ரயில்வே ஸ்டேஷனில், அம்ருத் பாரத் திட்டப்பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.
கடந்த, 2023 ஆகஸ்ட் மாதம், நாடு முழுவதும், 508 ரயில்வே ஸ்டேஷன்களில், அம்ருத் பாரத் என்ற திட்டத்தின் கீழ், விரிவாக்கம் செய்யும் பணிகளை, பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அதில், கரூர் ரயில்வே ஸ்டேஷனில், 34 கோடி ரூபாய் செலவில் விரிவாக்க பணிகள் தொடங்கியது. கார் பார்க்கிங், புதிய கழிப்பிட வசதிகள், ரயில்வே ஸ்டேஷன் முகப்பு மாற்றம், நகரும் படிக்கட்டுகள், பார்சல் குடோன், கேன்டீன், பிளாட்பாரங்களில் இருக்கை வசதி உள்ளிட்ட பணிகள் முக்கியமானவை.
கரூர் ரயில்வே ஸ்டேஷனில், வரும் டிசம்பருக்குள் விரிவாக்க பணிகளை நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதனால், கரூர் ரயில்வே ஸ்டேஷனில், அம்ருத் பாரத் திட்டப் பணிகளை, 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள், இரவு பகலாக மேற்கொண்டு வருகின்றனர்.