/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
திறப்பு விழா காணாமல் கைவிடப்பட்ட பூங்கா
/
திறப்பு விழா காணாமல் கைவிடப்பட்ட பூங்கா
ADDED : பிப் 08, 2026 05:57 AM

அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட, பள்ளப்பட்டி நகராட்சியில், 17-வது கிராஸ், ஷா நகரில் ஓராண்டுக்கு முன்பு, சக்தி பூங்கா கட்டி முடிக்கப்பட்டு தற்போது வரை திறப்பு விழா காணாத நிலையில் பராமரிப்பின்றி உள்ளது. அரசு நிதியுதவியுடன், பொதுமக்களின் ஓய்வு நேர பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்ட பூங்கா, தற்-போது பயன்பாடற்ற நிலையில் உள்ளது.
பூங்-காவில் குழந்தைகளுக்காக அமைக்கப்பட்டிருந்த, விளையாட்டு உபகரணங்கள் ஒன்றன் பின் ஒன்-றாக திருடப்பட்டுள்ளதுடன், அங்கு கட்டப்பட்டி-ருந்த கழிவறையின் கதவுகள் உள்ளிட்ட பொருட்-களும் மர்ம நபர்களால் திருடப்பட்டுள்ளதாக இப்-பகுதி மக்கள் கூறுகின்றனர்.பூங்கா முழுவதும் புதர்கள் அடர்ந்து, விஷ ஜந்-துக்கள் தங்கும் இடமாக மாறியுள்ளது. ஓராண்-டுக்கும் மேலாக மக்கள் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. எனவே, பள்ளப்பட்டி நகராட்சி நிர்வாகம் போர்க்கால நடவடிக்கை எடுத்து, பூங்காவை சீர-மைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என, இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்-றனர்.

