sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

வக்கீல்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

/

வக்கீல்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

வக்கீல்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

வக்கீல்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்


ADDED : ஏப் 16, 2024 06:57 AM

Google News

ADDED : ஏப் 16, 2024 06:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை : குளித்தலை, ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் குடும்ப நல வழக்குகளை, கரூர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டதை கண்டித்து, வழக்கறிஞர் சங்கம் சார்பில் நீதிமன்ற புறக்கணிப்பு மற்றும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

குளித்தலை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன், நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. எவ்வித அறிவிப்பும் இல்லாமல், குடும்ப நல வழக்குகளை கரூர் நீதிமன்றத்திற்கு மாற்றப்படுவதை கண்டித்து கடந்த, 15 முதல், 18 வரை குளித்தலை, கிருஷ்ணாராயபுரம் நீதிமன்ற பணிகளில் இருந்து விலகி இருப்பது என, வழக்கறிஞர்கள் சங்க அவசர பொது உறுப்பினர் கூட்டத்தில் கடந்த, 12ல் முடிவு செய்யப்பட்டது.

மேலும், குடும்ப நல வழக்காளிகள் பாதிப்பை தடுக்கும் விதமாக, வழக்கறிஞர்கள் சங்கத்தின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி, குளித்தலை நீதிமன்றத்திற்கு வெளியே நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் சாகுல் அமீது தலைமை வகித்தார். மூத்த நிர்வாகிகள், சங்க பொறுப்பாளர்கள், வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். நான்கு நாட்கள் வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணிகளை புறக்கணிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us