/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வி.ஏ.ஓ., கூட்டமைப்பு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
/
வி.ஏ.ஓ., கூட்டமைப்பு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
வி.ஏ.ஓ., கூட்டமைப்பு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
வி.ஏ.ஓ., கூட்டமைப்பு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 21, 2024 02:54 AM
குளித்தலை: குளித்தலை ஆர்.டி.ஓ., அலுவலகம் முன், தமிழ்நாடு அனைத்து கிராம நிர்வாக அலுவலர்களின் கூட்டமைப்பு சார்பில், நேற்று முன்தினம் மாலை, 6:30 மணிக்கு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்க மாவட்ட செயலாளர் ரவி, தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவ-லர்கள் சங்க
மாவட்ட துணைத்தலைவர் முத்துக்குமார் ஆகியோர் தலைமை வகித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், கடந்த, 2024 ஜன., 8ல் நடந்த பேச்சு-வார்த்தை உடன்பாடுகளை நிறைவேற்ற வேண்டும். டிஜிட்டல் கிராப் சர்வே
பணிக்கு, பிற மாநிலங்களை போல கூடுதல் பணி-யாளர்களை நியமிக்க வேண்டும். டிஜிட்டல் கிராப் சர்வே பணிக்கு, உரிய தொகையை
வழங்க வேண்டும் என்பன உள்-ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
தொடர்ந்து, குளித்தலை, கடவூர், கிருஷ்ணராயபுரம் தாலுகாவில் பணியில் இருக்கும் இரண்டு சங்கத்தில் மாவட்ட, வட்ட
பொறுப்பாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். ஆர்ப்-பாட்டத்தில் பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் உள்பட பலர்
கலந்துகொண்டனர்.