/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பைக் மோதிய விபத்தில் நடந்து சென்ற முதியவர் பலி
/
பைக் மோதிய விபத்தில் நடந்து சென்ற முதியவர் பலி
ADDED : டிச 19, 2024 01:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர், டிச. 19-
க.பரமத்தி அருகே, பைக் மோதியதில் முதியவர் உயிரிழந்தார்.
கரூர் மாவட்டம், க.பரமத்தி பவித்திரம் பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து, 73. இவர் கடந்த, 16ல் இரவு பவித்திரம் வானவில் பிரிவு பகுதியில், நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அந்த வழியாக ராமநாதன், 44, என்பவர் ஓட்டி சென்ற என்பீல்டு பைக், மாரிமுத்து மீது மோதியது. அதில், படுகாயம் அடைந்து கரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாரிமுத்து, நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார்.
இதுகுறித்து, மாரிமுத்து மனைவி காந்திமதி கொடுத்த புகார்படி, க.பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.