/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அங்கன்வாடி ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்
/
அங்கன்வாடி ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்
ADDED : நவ 08, 2025 04:07 AM
கரூர்: தமிழ் மாநில அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம், கரூர் மாவட்ட கிளை சார்பில், மாவட்ட தலைவர்
பத்மாவதி தலைமையில், கலெக்டர் அலுவலகம் முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.அதில், போசன் டிராக்கர் செயலியில், முக அங்கீகாரம் பதி-வேற்றம் செய்வதை கைவிட வேண்டும், அங்கன்வாடி ஊழியர்-களை அரசு ஊழியர்களாக மாற்றி, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், உயர்நீதிமன்ற தீர்ப்பின் படி பணிக்கொடை வழங்க வேண்டும், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு அகவிலைப்படியுடன் ஓய்வூதியம் வழங்க வேண்டும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்பட, பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்-டது.
ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட செயலாளர் கலா, செயற்குழு உறுப்-பினர் கோகிலா உள்பட, பலர் மொபைல் போனில் டார்ச் லைட் அடித்தபடி பங்கேற்றனர்.

