/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கிருஷ்ணராயபுரம் சட்டசபை தொகுதியில் அண்ணாதுரை பிறந்தநாள் விழா கூட்டம்
/
கிருஷ்ணராயபுரம் சட்டசபை தொகுதியில் அண்ணாதுரை பிறந்தநாள் விழா கூட்டம்
கிருஷ்ணராயபுரம் சட்டசபை தொகுதியில் அண்ணாதுரை பிறந்தநாள் விழா கூட்டம்
கிருஷ்ணராயபுரம் சட்டசபை தொகுதியில் அண்ணாதுரை பிறந்தநாள் விழா கூட்டம்
ADDED : செப் 21, 2024 02:53 AM
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் சட்டசபை தொகுதி, அ.தி.மு.க., சார்பில் அண்-ணாதுரை பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. மேற்கு ஒன்றிய செயலாளர் பாரி தலைமை வகித்தார். இதில், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்துகொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது: மின்கட்டணம், டீசல், பெட்ரோல் விலை உயர்வால், மக்கள் தினமும் கஷ்டப்படுகின்றனர். மக்களை காப்பதற்காக, 520 தேர்தல்
வாக்குறுதிகள், தி.மு.க., அரசு கூறியது. இதில் ஒன்றை-கூட சரியாக செயல்படுத்தவில்லை. குடும்பத்திற்கு தலா, 1,000 ரூபாய்
உரிமைத்தொகை வழங்கப்படும் என, வாக்குறுதி அளித்-தனர். நிதி பிரச்னை என காரணம் காட்டி, ஒரு கோடியே, 20 லட்சம்
மகளிர்களுக்கு மட்டும் உதவித்தொகை வழங்கி வருகி-றது. அ.தி.மு.க., ஆட்சியில், 10 ஆண்டுகளில் ஏராளமான மக்கள் திட்டம்
செயல்படுத்தப் பட்டது. இதனால், ஏழை, எளிய, நடுத்-தர மக்கள் பயனடைந்தனர். தற்போது, தலைகீழாக மக்கள்
கஷ்-டப்படுகிறன்றனர். வேலை இல்ல திண்டாட்டம் அதிகரித்துள்-ளது. சட்டம் ஒழுங்கு சரியில்லை. போதை பழக்க வழக்கம்
அதிக-ரித்துள்ளது. இதனால் நாடு மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்-ளது. ஆளும் தி.மு.க., அரசு அதிகமாக கடன் வாங்கி
வருகிறது. இதனால் விரைவில் அரசு திவால் ஆகும் நிலைக்கு தள்ளப்படும் என அச்சப்பட வேண்டியுள்ளது.இவ்வாறு அவர் கூறினார். முன்னாள் அமைச்சர் சரோஜா, கரூர் மாவட்ட அ.தி.மு.க., நிர்வா-கிகள் தானேஷ் முத்துகுமார், திருவிகா, தங்கராஜ், நகுல்சாமி,
கிருஷ்ணன், கிருஷ்ணராயபுரம் நகர செயலாளர் ராஜா, அம்மா பேரவை செயலாளர் வக்கீல் தினேஷ், மாவட்ட கவுன்சிலர் சிவ-னாந்தம்
உள்பட பலர் கலந்து கொண்டனர்.