/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மகளிர் உயர்நிலை பள்ளியை தரம் உயர்த்த வேண்டுகோள்
/
மகளிர் உயர்நிலை பள்ளியை தரம் உயர்த்த வேண்டுகோள்
ADDED : செப் 29, 2024 03:30 AM
அரவக்குறிச்சி: மாணவிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, கூடுதல் கட்டடங்கள், கழிவறைகள் அமைத்து மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரவக்குறிச்சி, அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளி, 40 ஆண்டுக-ளுக்கும் மேலாக இயங்கி வருகிறது. ஆண்டுதோறும், 80 சதவீ-தத்திற்கும் மேல் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று வருகின்-றனர். பத்தாம் வகுப்புக்கு மேல் இப்பள்ளியில் படிக்கும் மாண-விகள், தனியார் பள்ளிகளிலோ அல்லது அருகில் இருக்கும் அரசு மேல்நிலைப் பள்ளிகளிலோ பயின்று வருகின்றனர்.பத்தாம் வகுப்பிற்கு மேல் வேறு பள்ளிக்கு செல்ல முடியாமல், சில மாணவிகள் படிப்பை நிறுத்தி விடுகின்றனர். மேலும் பள்-ளியில் போதிய கட்டட வசதி, கழிப்பிட வசதி இல்லாததால் மாணவிகள் சிரமப்படுகின்றனர். எனவே மாணவிகளின் எதிர்-கால நலன் கருதி, உயர்நிலைப் பள்ளியாக செயல்பட்டு வரும், அரவக்குறிச்சி மகளிர் உயர்நிலைப் பள்ளியை, மேல்நிலைப் பள்-ளியாக தரம் உயர்த்த பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.