/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வேளாண் அடுக்கு திட்டத்தில் இணைந்து பயன்பெற விவசாயிகளுக்கு வேண்டுகோள்
/
வேளாண் அடுக்கு திட்டத்தில் இணைந்து பயன்பெற விவசாயிகளுக்கு வேண்டுகோள்
வேளாண் அடுக்கு திட்டத்தில் இணைந்து பயன்பெற விவசாயிகளுக்கு வேண்டுகோள்
வேளாண் அடுக்கு திட்டத்தில் இணைந்து பயன்பெற விவசாயிகளுக்கு வேண்டுகோள்
ADDED : மார் 05, 2025 07:15 AM
அரவக்குறிச்சி: விவசாயிகள் பல்வேறு திட்ட பலன்களை பெறுவதற்காக, தங்களது நில உடமை விபரங்கள், பயிர் ஆவணங்கள், சாகுபடி அறிக்கை போன்ற தொடர்புடைய ஆவணங்களை, ஒவ்வொரு முறையும் சமர்ப்பிக்க வேண்டியுள்ளது. இதில் ஏற்படும் காலதாமதத்தை தவிர்க்கும் வகையில், அரசின் திட்டங்களில் விவசாயிகள் குறித்த நேரத்தில் பயன்பெற ஏதுவாக, அனைத்து விபரங்களையும் மின்னணு முறையில் சேகரித்திட, வேளாண் அடுக்கு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தற்போது விவசாயிகளின் பதிவு விபரங்களுடன் ஆதார் எண், கைபேசி எண், நில உடமை விபரங்களையும் இணைக்கும் பணி, அரவக்குறிச்சி வருவாய் கிராமத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் நடந்து வருகிறது. மேலும் விவசாயிகள் பொது சேவை மையம் சென்று இப்பதிவுகளை மேற்கொள்ளலாம்.
நில உடமை விபரங்கள் இணைக்கப்பட்ட பின், அனை த்து விபரங்களுக்கும் ஒருங்கிணைக்கப்பட்ட ஆதார் எண் போன்ற, தேசிய அளவிலான விவசாயிகளுக்கான அடையாள அட்டை வழங்கப்படும். 2025--26ம், நிதியாண்டு முதல் பிரதம மந்திரி கவுரவ நிதி திட்டம், பயிர் காப்பீட்டு திட்டம் போன்ற மத்திய, மாநில அரசு திட்டங்களில் விவசாயிகள் எளிதில் பயன்பெற விவசாய தனித்துவ அடையாள அட்டை எண் மிகவும் அவசியம். எனவே விவசாயிகள், தோட்டக்கலைத்துறை அலுவலர்களை அணுகி, சிறப்பு முகாம்கள் மற்றும் அருகில் உள்ள பொது சேவை மையங்களுக்கு சென்று தங்கள் நில உடமை விபரங்கள், ஆதார் எண், ஆதாருடன் இணைக்கப்பட்ட கைப்பேசி எண் ஆகிய விபரங்களை அளித்து எவ்வித கட்டணமும் இன்றி மார்ச், 31ம் தேதிக்குள் இத்திட்டத்தில் பதிவு செய்து பயன்பெறலாம். இத்தகவலை, அரவக்குறிச்சி வேளாண்மை உதவி இயக்குனர் ராஜா தெரிவித்துள்ளார்.