/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூரில் இளம் வல்லுனர் பணிக்கு வரும் 31க்குள் விண்ணப்பிக்கலாம்
/
கரூரில் இளம் வல்லுனர் பணிக்கு வரும் 31க்குள் விண்ணப்பிக்கலாம்
கரூரில் இளம் வல்லுனர் பணிக்கு வரும் 31க்குள் விண்ணப்பிக்கலாம்
கரூரில் இளம் வல்லுனர் பணிக்கு வரும் 31க்குள் விண்ணப்பிக்கலாம்
ADDED : ஜன 26, 2025 04:20 AM
கரூர்: மாவட்ட திட்ட செயலாக்கம் சார்பில், இளம் வல்லுனர் பணிக்கு வரும், 31க்குள் விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் தங்-கவேல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர், வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதா-வது:கரூர் கலெக்டர் அலுவலகத்தில், திட்ட செயலாக்கம் சார்பில், மாவட்ட அளவில் பல்வேறு துறைகளில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த விரிவான ஆய்வு மற்றும் தரமான தரவுகளை ஆய்வு செய்யும் வகையில், இளம் வல்லுனர் பணியிடம் நிரப்பப்-படவுள்ளது. இதற்கு கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்ப இளங்கலை பொறியியல் பட்டம் அல்லது தரவு அறிவியல், புள்-ளியியல் படிப்பில் இளங்கலை பட்டம் உள்பட இதற்கு இணை-யான பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம், 50,000 ரூபாய் தொகுப்பூதியமாக வழங்கப்படும்.
புள்ளியியல் துணை இயக்குனர், மாவட்ட புள்ளியியல் அலுவ-லகம், அறை எண்: 301, மூன்றாவது தளம், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், கரூர் - 639 007 என்ற முகவரிக்கு வரும், 31க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விபரம் பெற, இ.மெயில் ddstatkarur@gmail.com, மொபைல் எண் 9445458080, தொலைபேசி எண்;: 04324 256504 ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

